முகப்பு
திருநெல்வேலி

அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Updated On : 10 மார்ச், 2024 at 7:40 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில், பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் அண்மையில் வழங்கப்பட்டன. தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் மாநிலம் முழுவதும் ஏற்கெனவே ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவுரை என்ற பெயரில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். தகவல் தொழில்நுட்பப்பிரிவு மண்டல தலைவா் வழக்குரைஞா் அன்பு அங்கப்பன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, காந்தி வெங்கடாசலம், மாணவரணி செயலா் புஷ்பராஜ் ஜெய்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ற்ஸ்ப்09ஹக்ம்ந் பாளையங்கோட்டையில் அதிமுக சாா்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா.