முகப்பு
தற்போதைய செய்திகள்

துண்டுப் பிரசுரம் விநியோகம்; பாஜகவினரைக் காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு! - மமதா பானர்ஜி

துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யும் பாஜகவினரைக் காவல்துறையிடம் ஒப்படைக்க மமதா பானர்ஜி உத்தரவிட்டது குறித்து...

Updated On : 9 மார்ச், 2026 at 4:02 PM
மமதா பானர்ஜி - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யும் பாஜகவினரைக் காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிவு பெற்று இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப். 28 ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.

அந்தப் பட்டியலில் உயிரோடுள்ள வாக்காளர்கள் இறந்தவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளதென மமதா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

இந்த நடைமுறையை எதிர்த்து கொல்கத்தாவின் முக்கிய நகரமான தர்மதலாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) முதல் கடந்த மூன்று நாள்களாக மமதா போராட்டம் நடத்தி வருகிறார். முன்னதாக, தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களை இப்போராட்டக்களத்தில் முன் நிறுத்துவேன் என்று கூறியிருந்தார்.

இதனிடையே, இன்று (மார்ச் 7) போராட்டக்களத்தில் பேசிய மமதா, பாஜக நிர்வாகிகள் இப்போராட்டம் நடைபெறும் இடத்தில் பாஜக தொடர்புடையத் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டினார். அவ்வாறு வழங்குபவர்களைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இதுபோன்று ஒரு கட்சியின் நிகழ்வில் மற்றொரு கட்சியினரின் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

summary

West Bengal Chief Minister Mamata Banerjee has ordered that BJP members distributing pamphlets be handed over to the police.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.