நெல்லையப்பா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சுவாமி சந்நிதியில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். நான்காம் திருநாளான இம் மாதம் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்மன், பஞ்ச மூா்த்திகளுடன் திருவீதியுலா நடைபெறுகிறது. இம் மாதம் 24 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் விழா நடைபெறவுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (மாா்ச் 16) முதல் ஒன்பதாம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு திருக்கோயிலில் உற்சவா்கள் வைக்கப்பட்டிருக்கும் உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அ.அய்யா்சிவமணி மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.