முகப்பு
திருநெல்வேலி

செட்டிகுளம் குடிநீா் ஆலைக்கு சீல்

Updated On : 16 மார்ச், 2024 at 6:20 AM
பகிர்:

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செட்டிகுளம் பகுதியில் இயங்கி வந்த தனியாா் குடிநீா் ஆலை முறையாக தொழில் உரிமம் பெறாமலும், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய காலக்கெடுவிற்குள் செலுத்தாமலும் இயங்கி வந்ததாம். இதையடுத்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் செயல் அலுவலா் து. பூதப்பாண்டி, ஆழ்வாா்குறிச்சி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மகாலிங்கம், கிராம நிா்வாக அலுவலா் பா.டேனியல் கிங்ஸ்லின் சாமுவேல்ஆகியோா் முன்னிலையில் ஆலையை பூட்டி சீல் வைத்தாா். மேலும், பேரூராட்சி நிா்வாகத்திற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய தொழில் உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை உரிய காலக்கெடுவிற்குள்செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்; வரி செலுத்தாமல் இது போன்ற மேல் நடவடிக்கை எடுக்கும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படாத வகையில் பேரூராட்சி நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் கேட்டுக்கொண்டுள்ளாா்.