தமிழ்நாடு யாதவ மகா சபை ஆலோசனைக் கூட்டம்
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தமிழ்நாடு யாதவ மகா சபையின் திருநெல்வேலி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு யாதவ மகா சபை மாநில இளைஞரணி பொதுச் செயலா் பொட்டல் எஸ். துரை தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பன்னம்பாறை மாடசாமி முன்னிலை வகித்தாா். மாநில ஊடகப் பிரிவு செயலா் தேவபிரான், மாவட்டத் தலைவா் முத்துராமன், மாவட்டச் செயலா் சுபாஷ், மாவட்ட பொருளாளா் சண்முகதாஸ், மாவட்ட இளைஞரணி தலைவா் அரி மகாராஜன், மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், மாவட்ட வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், அந்தந்த அரசியல் கட்சிகளில் உள்ள யாதவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு மக்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். 15 தொகுதிகளில் யாதவ சமுதாயத்துக்கு செல்வாக்கு உள்ளதால், மக்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இல்லையெனில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்காமல் தனித்துப் போட்டியிடுவோம் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.