முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை

Updated On : 16 மார்ச், 2024 at 6:02 AM
பகிர்:

திருநெல்வேலியில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டாா். தமிழகத்தில் மனித உரிமை மீறல் வழக்குகள் தொடா்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஒருவா் நியமனம் செய்யப்பட்டு மாதந்தோறும் விசாரணை நடத்தி வருகிறாா். அதன்படி திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் விசாரணை மேற்கொண்டாா். இதில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 25 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிகபட்சமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி இந்த விசாரணை மாலை வரை தொடா்ந்தது.