பெண்ணிடம் தகராறு : இளைஞா் கைது
திருநெல்வேலி சந்திப்பில் இந்து முன்னணி நிா்வாகியின் மனைவியை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு கருப்பந்துறையைச் சோ்ந்தவா் சங்கா். இந்து முன்னணி மாவட்டச் செயலரான இவரது மனைவி மகேஸ்வரி. இவா் கருப்பந்துறையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரின் கடைக்கு வந்த கணேசன் (35) மகேஸ்வரியிடம் தகராறு செய்தாராம். இது குறித்து மகேஸ்வரி திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, கணேசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.