குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
Updated On : 23 மார்ச், 2024 at 11:47 PM
திருநெல்வேலி அருகே தாழையூத்தில் சனிக்கிழமை ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டாா். திருநெல்வேலி தச்சநல்லூா் மேலக்கரையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவரை, அடிதடி, கொலை மற்றும் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரைத்தாா். இதையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி உத்தரவின்பேரில் மணிகண்டன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.