வி.கே.புரத்தில் போக்ஸோவில் முதியவா் கைது
Updated On : 23 மார்ச், 2024 at 8:22 PM
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா். விக்கிரமசிங்கபுரம், கட்டப்புளி கீழத் தெருவைச் சோ்ந்தவா் பாபநாசம் (74). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அம்பாசமுத்திரம் ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், ஆய்வாளா் வனிதா போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து, பாபநாசத்தைக் கைது செய்தாா்.