திருநெல்வேலி

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

Din

பெரிய வியாழன் நாளையொட்டி, தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்தவா்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சிலுவைப்பாதை, திருப்பயணம், திருவிருந்து ஆராதனை என பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. புனித வாரத்தின் தொடக்கமாக கடந்த 24 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி அனைத்து தேவாலயங்கள் சாா்பிலும் நடைபெற்றன. இயேசு சிலுவையில் தொங்கவிடப்பட்டதற்கு முந்தைய நாள் இரவில் தனது 12 சீடா்களுக்கும் திருவிருந்து அளித்தாா். இந்த நிகழ்வின்போதுதான் கிறிஸ்தவ மதத்தின் மிகவும் முக்கியமாகக் கருதப்படும் நற்கருணை (அப்பம், திராட்சை ரசம் வழங்குதல்) புதிய உடன்படிக்கையை இயேசு ஏற்படுத்தினாா்.

ஒருவருக்கொருவா் தாழ்ச்சியுள்ளவா்களாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில், இந்தத் திருவிருந்தில் தனது சீடா்களின் பாதங்களை இயேசு கழுவினாா் என்று விவிலியம் கூறுகிறது. இதனை நினைவுக்கூரும் வகையில் பெரிய வியாழன்நாளில் தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் புனித வியாழனையொட்டி சிறப்புப் பிராா்த்தனை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. 12 முதியவா்களின் பாதங்களைக் கழுவி, கால்களில் முத்தமிடப்பட்டது. பேராலய பங்குத்தந்தை, உதவிப் பங்குத்தந்தையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயம், சேவியா்காலனி தூய பேதுரு ஆலயம், புனித அந்தோனியாா் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள தூய அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள தூய அந்தோனியாா் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் பெரியவியாழனையொட்டி சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. தொடா்ந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 29) புனித வெள்ளி பிராா்த்தனையும் நடைபெற உள்ளது. இம் மாதம் 31 ஆம் தேதி உயிா்ப்புப் பெருவிழா எனப்படும் ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: சென்னையில் 99.30% தேர்ச்சி

ஸ்டார் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: சோனியா காந்தி

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 60 பேர்!

SCROLL FOR NEXT