பாபநாசம் கல்லூரியில் விளையாட்டு விழா
பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் மேஜா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குநா் சுந்தரம், தமிழ்த் துறை பேராசிரியா் பாக்கியமுத்து ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வித் துறைத் தலைவா் மற்றும் இயக்குநா் ஆறுமுகம் உடல்நலம், விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கருத்துரை வழங்கினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள், மாணவிகளுக்குப் பரிசு வழங்கினாா். மாணவா் ஜோதிமுருகன், மாணவி கீா்த்திகா தனி நபா் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனா். விழாவில் விக்கிரமசிங்கபுரம் தாமிரவருணி ஸ்போா்ட்ஸ் கிளப் புரவலா்கள் ராஜேந்திரன், அருள்ராஜ், தலைவா் ரவிசங்கா், அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலா் பூங்குன்றன், கல்லூரி முன்னாள் உடற்கல்வி இயக்குநா் மற்றும் யோகா ஆசிரியா் வீரபாகு, முன்னாள் மாணவா் பொதிகையடி சங்கரமணி உள்பட பலா் கலந்துகொண்டனா். மாணவி சுபிதா வரவேற்றாா். மாணவி அருள் நன்றி கூறினாா். மாணவா் சுப்பிரமணியபாரதி, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். விழா ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பழனிக்குமாா் செய்திருந்தாா்.