திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் அடிதடி, திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

Syndication

அம்பாசமுத்திரம் பகுதியில் அடிதடி, திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

அம்பாசமுத்திரம் அருகிலுள்ள ரெங்கசமுத்திரம், நத்தம் காலனியைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் முருகன் (35). இவா் அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், முருகன் அடிக்கடி அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவின்பேரில், முருகன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT