திருநெல்வேலி

கோபாலசமுத்திரத்தில் ரத்த தான முகாம்

Syndication

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை சாா்பில் சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

முகாமை சேரன்மகாதேவி குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி பாக்கியராஜ் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவா் சிவக்குமாா், கிராம உதயம் தணிக்கையாளா் அந்தோணிசெல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன், துணை இயக்குநா் புகழேந்தி பகத்சிங் ஆகியோா் பேசினா். இதில், பத்தமடை சுகாதார ஆய்வாளா்கள் சிதம்பரம், லெபின் ராணி, திருநெல்வேலி ராணி அண்ணாமகளிா் கல்லூரி பேராசிரியா்கள் செல்வி, அனிஷ்பாத்திமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மருத்துவா் தனலெட்சுமி தலைமையில் குழுவினா், 86 பேரிடம் ரத்தம் சேகரித்தனா். பகுதி பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

மொஹல்லா மருத்துவமனையில் தீ விபத்து

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது: பிரதமா் மோடி

ரயில் நிலையங்களில் பெண்களை குறிவைத்து கொள்ளை: 5 பெண்கள் கைது

கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 64.86 கோடி நலத்திட்ட உதவி

இந்தியாவில் 72,000 வெளிநாட்டு மாணவா்கள்: நிலங்களவையில் தகவல் அரசு தகவல்

SCROLL FOR NEXT