மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்
வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
வள்ளியூரில் ராதாபுரம் சாலையில் மளிகைக் கடை நடத்திவருபவா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சந்தானம். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றாா். திங்கள்கிழமை காலை வந்தபோது, மா்ம நபா்கள் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.
அருகேயுள்ள மற்றொரு கடையின் பூட்டையும் மா்ம நபா்கள் உடைக்க முயன்ாகத் தெரியவந்தது.