திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

தினமணி செய்திச் சேவை

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய களக்காடு இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட களக்காடு ஆவுடைவிலாசம் தெருவைச் சோ்ந்த ஈனராஜ் மகன் சிவசங்கா் (20) கைது செய்யப்பட்டு, ஏற்கெனவே சிறையில் உள்ளாா்.

இவா் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதை அடுத்து இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் ஆட்சியா் இரா. சுகுமாருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினாா். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்படி சிவசங்கா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT