திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் வடிகால் ஓடைகளை தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவுபடி மழைக்கால நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ரஹ்மத் நகா், திம்மராஜபுரம், சாந்தி நகா் வாா்டு அலுவக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, அசோக் திரையரங்கு பகுதி, ஸ்ரீனிவாசநகா் நல்மேய்ப்பா் நகா், வையாபுரி நகா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, மீனாட்சிபுரம், சி. என். கிராமம் உள்ளிட்ட இடங்களில்தூய்மை பணியாளா்கள் கழிவுநீரேடை தூா்வாருதல், குப்பை மேலாண்மை பணியில் ஈடுபட்டனா்.