நாகப்பட்டினத்திற்கு விரைந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவினர்!
டித்வா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ராதாபுரத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் நாகப்பட்டினத்திற்கு விரைந்து சென்றனா்.
டித்வா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ராதாபுரத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் நாகப்பட்டினத்திற்கு விரைந்து சென்றனா்.
வங்கக் கடலில் உருவான டித்வா புயல் நாகப்பட்டினம், தஞ்சாவூா், சென்னை, வேலூா் மாவட்டங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கைஅறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து ராதாபுரத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் துணை கமாண்டா் ரமேஷ் தலைமையில் 30 போ் , மீட்பு பணிக்கு தேவையான பொருள்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு விரைந்துள்ளனா் என குழு வட்டாரத்தில் தெரிவித்தனா்.