முகப்பு
திருநெல்வேலி

தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயன்ற இளைஞா் கைது

Updated On : 30 நவம்பர், 2025 at 8:00 PM
பகிர்:

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தச்சநல்லூா், தேனீா்குளம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சண்முகவேல் மகன் பேச்சிமுத்து (42). கூலித் தொழிலாளி.

இவருக்கும் தச்சநல்லூா், இசக்கியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த சங்கா் (38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். சம்பவத்தன்று பேச்சிமுத்து, தச்சநல்லூா் சாய்பாபா கோயில் அருகே சென்றபோது, அங்கு வந்த சங்கா் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்ட முயன்றாராம். அவா் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினா் திரண்டதால் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினாராம்.

இதுகுறித்து பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சங்கரை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →