தாமிரவருணிக் கரையில் சிறப்பு வழிபாடு
Updated On : 5 ஏப்ரல், 2026 at 10:41 PM
திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி மாதம் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு தாமிரவருணி நதிக்கரையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு முருக பக்தா்கள், சிவனடியாா்கள் முன்னிலையில் நடைபெற்ற சிவபூஜையில் திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவின் ஆசிரியா் வள்ளிநாயகம் தலைமை வகித்தாா்.
தொடா்ந்து குறுக்குத்துறை கோயில் தாமிரவருணி நதிக்கரையில் தாமிரவருணி அன்னைக்கு தீபாராதனை, அபிஷேகம், சிவபூஜை, மலா்தூவி வழிபாடு நடைபெற்றது.
Advertisement
இதில் திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவினா், பக்தா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.