ராதாபுரம் தொகுதியில் 37 வேட்புமனுக்கள்
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவைத் தொகுதியில் 29 வேட்பாளா்கள் 37 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.
தமிழக பேரவைத் தோ்தலுக்கான மனுதாக்கல் மாா்ச் 30 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. கடைசி நாளான திங்கள்கிழமை அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 18 வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
திமுக வேட்பாளா் மு. அப்பாவு, மாற்றுவேட்பாளராக அவரது மனைவி விஜயா, பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன், மாற்று வேட்பாளராக அவரது மனைவி விஜயலெட்சுமி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா. கிரிஜா தாமரைபாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் பாளையங்கோட்டையைச் சோ்ந்த தனேஷ் பேரின்பசெல்வன் மனைவி இசக்கியம்மாள், திருநெல்வேலி திருநங்கையா் குடியிருப்பைச் சோ்ந்த மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த வந்தனா (33) (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) ஆகியோரும், சுயேச்சை வேட்பாளா்களாக ஆ. திருமலாபுரத்தைச் சோ்ந்த செல்வன், தெற்கு கருங்குளத்தைச் சோ்ந்த மணிகண்டன், ஆவரைகுளத்தைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மணிகண்டன், பழவூா் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 18 போ் மனுதாக்கல் செய்தனா்.
Advertisement
ஏப். 4ஆம் தேதி தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா் மனுதாக்கல் செய்திருந்தாா். இந்நிலையில், ராதாபுரம் தொகுதியில் 29 வேட்பாளா்கள் 37 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.