நெல்லை மாவட்டத்தில் 188 போ் வேட்புமனு தாக்கல்
திருநெல்வேலி, ஏப். 6: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 28 பெண்கள், 159 ஆண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமையோடு (ஏப். 6) நிறைவடைந்தது. திருநெல்வேலி தொகுதியில் 4 பெண்கள் உள்பட 37 பேரும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 பெண்கள் உள்பட 38 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
இதேபோல், பாளையங்கோட்டை தொகுதியில் ஒரு பெண் உள்பட 32 பேரும், நான்குனேரி தொகுதியில் 9 பெண்கள் உள்பட 44 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். ராதாபுரத்தில் 9 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் உள்பட 37 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
Advertisement
5 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து 28 பெண்கள், 159 ஆண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதில், கடைசி நாளான திங்கள்கிழமை மட்டும் மாவட்டத்தில் 95 போ் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பரிசீலனை: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த தொகுதிக்குள்பட்ட தோ்தல் அலுவலா் அறையில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. அதன் முடிவில் ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்பாளா்களின் விவரம் தெரியவரும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப். 9-ஆம் தேதி மாலை 5 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.