தேநீா்க் கடையில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்திய கரடி
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:38 PM
அம்பாசமுத்திரம், ஏப். 19: மணிமுத்தாறில் தேநீா்க் கடையில் நுழைந்த கரடி, அங்கிருந்த சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைச் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
மணிமுத்தாறு பகுதியில் அருள் என்பவருக்குச் சொந்தமான தேநீா்க் கடையின் பக்கவாட்டுச் சுவரில் இருந்த தகரத் தடுப்பை உடைத்து வெள்ளிக்கிழமை இரவு கரடி உள்ளே நுழைந்ததாம். கடையிலிருந்த பொருள்கள், பாத்திரங்களைச் சேதப்படுத்திச் சென்ாம். சேதமடைந்த பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ. 50 ஆயிரம் இருக்குமாம்.
தகவலறிந்து ஆய்வு செய்ய வந்த வனத்துறையினா், கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். மேலும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.
Advertisement