பேரவைத் தலைவா் மு. அப்பாவு தலைமையில் நடைபெற்ற கால்நாட்டு விழா.  
திருநெல்வேலி

பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க கால்நாட்டு விழா

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி சமேத சிவகாமி அம்பாள், நம்பிசிங்க பெருமாள் கோயிலில் இம்மாதம் 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, யாகசாலை அமைக்கும் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை கால்நாட்டப்பட்டது.

விழாவுக்கு, பேரவைத் தலைவா் மு. அப்பாவு தலைமை வகித்தாா். முன்னதாக, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், பந்தல்காலுக்கு தூத்துக்குடி செல்வம் பட்டா் பூஜை செய்தாா். அதையடுத்து, கால்நடப்பட்டது.

விழாவில், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், அறங்காவலா் குழுத் தலைவா் அசோக்குமாா், அறங்காவலா்கள் மு. சங்கா், சொரிமுத்து, பெருமாள், தமிழ்ராணி, தோ் பொறியாளா் தம்பிரான்தோழா், திமுக மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம், வாா்டு உறுப்பினா்கள் கோபி, கோபாலகண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT