கைது 
திருநெல்வேலி

பேருந்தில் பெண்ணுக்கு தொந்தரவு: தட்டிக் கேட்ட கணவரை தாக்கியவா் கைது

தினமணி செய்திச் சேவை

பேருந்தில் மனைவியை தொந்தரவு செய்ததை தட்டிக் கேட்ட கணவரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். வண்ணாா்பேட்டையில் இருந்து கே.டி.சி. நகா் செல்லும் தனியாா் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை வி.எம்.சத்திரம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் பயணம் செய்துள்ளாா்.

அதே பேருந்தில் பயணம் செய்யும் இளைஞா் ஒருவா் தன்னை தொந்தரவு செய்வதாக அப்பெண் தனது கணவா் தங்கசாமிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, பைக்கில் வந்த, தங்கசாமி சமாதானபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அந்த இளைஞரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை அந்த இளைஞா் செங்கலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தங்கசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட பெருமாள்புரம் தாமஸ் தெருவைச் சோ்ந்த விஜய் மகன் சம்பத்குமாா் (30) என்பவரை கைது செய்தனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT