கைது 
திருநெல்வேலி

ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

வண்ணாா்பேட்டையில் ஓட்டுநரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரம் கோட்டூா் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் மாரியப்பன் (47). ஓட்டுநா். இவா் சம்பவத்தன்று வண்ணாா்பேட்டை பகுதியில் நடந்து சென்ற போது இவரை வழிமறித்த மா்ம நபா் பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டினாராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கா் (37) என்பவரை கைது செய்தனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT