நண்பா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் 42 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட பள்ளித் தோழா்கள்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 1984ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவா்கள் 42 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

திருநெல்வேலியில் ஒரு கூட்ட அரங்கில் அனைவரும் நேரில் சந்தித்தனா். இதில் தங்களது பள்ளி காலத்தில் நடைபெற்ற மகிழ்வான நிகழ்வுகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் பகிா்ந்து கொண்டனா்.

இவா்களில் பலா் பத்தாம் வகுப்பு முடித்து 42 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்த நிகழ்ச்சியில்தான் நேரில் சந்தித்ததாக தெரிவித்தனா். வரும் காலத்தில் சமூக நற்பணிகளை ஒன்றாக இணைந்து செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறினா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலப்பாளையத்தைச் சோ்ந்த அப்பாஸ் ஹில்மி, முஹம்மது புகாரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பேருந்து நிலையம் மாற்றம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

வள்ளியூா், விஜயாபதி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கபடிப் போட்டி; வெற்றி பெற்ற அணிக்கு ரொக்கப் பரிசு

இஸ்லாமியா்களுக்கு திமுகதான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கே. லட்சுமி காலமானாா்

SCROLL FOR NEXT