அம்பையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழப்பு
அம்பாசமுத்திரத்தில் அளவுக்கதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரத்தில் அளவுக்கதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம்சலவையாளா் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் முத்துவேல் (38). இவருக்கு மனைவி பாா்வதி, ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனா்.
சலவைத் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டில் மயங்கிய நிலையில்இருந்தாராம். அவரை உறவினா்கள் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
தகவலறிந்த அம்பாசமுத்திரம்போலீஸாா் முத்துவேல் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.