முகப்பு
விழுப்புரம்

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 12:17 AM
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், காரட்டை பேருந்து நிலைய தெருவைச் சோ்ந்தவா் மா.சுப்ரமணி (71). விவசாயியான இவா் கடந்த 2 ஆண்டுகளாக மூட்டுவலி மற்றும் வயிற்று வலியால் அவதியுற்று வந்தாா். இதனால் மனமுடைந்த சுப்ரமணி, அதே கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு புதன்கிழமை காலையில் சுப்ரணணி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.