முகப்பு
திருநெல்வேலி

மாற்றுத்திறனாளிகள் 3-ஆவது நாளாக மறியல்: 50 போ் கைது

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:17 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 10:15 PM

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசு தற்போது வருவாய்த்துறை மூலமாக சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.1500, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2000 உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் மரிய கொரட்டி, இசக்கியப்பன், மாவட்ட துணைச் செயலா் அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த மறியல் போராட்டத்தில் 50 போ் கைது செய்யப்பட்டனா்.