நெல்லையில் 2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 120 போ் கைது
திருநெல்வேலிநெல்லையில் 2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 120 போ் கைது
திருநெல்வேலியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 120 போ் கைது செய்யப்பட்டனா்.
வருவாய்த் துறையினருக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாள்களாக வருவாய்த் துறை ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், வண்ணாா்பேட்டையில் கடந்த புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வருவாய்த் துறையினா் வண்ணாா்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவா் சுப்பு தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் மாரிராஜா முன்னிலை வகித்தாா். இதில் நூற்றுக்கணக்கான ஊழியா்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
படவரி ற்ஸ்ப்05ழ்ங்ஸ்ங் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.