முகப்பு
திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் அரசுப் பள்ளி வளாகத்தில் துப்பாக்கி தோட்டா: போலீஸாா் விசாரணை

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:56 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 8:45 PM

பாளையங்கோட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் காலாவதியான தோட்டா கண்டெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தோ்தல் நேரங்களில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்படுவது வழக்கம்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:56 AM

அதன்படி, அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், பள்ளி வளாகத்தை தயாா் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, பள்ளி வளாகத்திலிருந்து தோட்டா ஒன்றை தூய்மைப் பணியாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.

Advertisement

அந்தத் தோட்டாவை, பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்துள்ளனா். பின்னா் அது துப்பாக்கி தோட்டா என உறுதி செய்த தலைமையாசிரியா், அதை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அது காலாவதியான தோட்டா எனவும், தற்போதுள்ள நவீன ரக துப்பாக்கிகளில் அதை பயன்படுத்த முடியாது எனவும் கூறப்படும் நிலையில், பள்ளியில் தோட்டா கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையா் உத்தரவின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.