திருநெல்வேலி

தச்சநல்லூா் அருகே இளைஞரைத் தாக்கிய இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

தச்சநல்லூா் அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து அருகே ராஜவல்லிபுரம் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் மகன் பொன்னுமணி(28). இவா் சம்பவத்தன்று தச்சநல்லூா் சிதம்பரம் நகா் பகுதியில் தாழையூத்து பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலருடன் மது அருந்தினாராம்.

அப்போது ஏற்பட்ட தகராறில் அவா்கள் பொன்னுமணியை மது பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பொன்னுமணி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தாழையூத்து மேலவாசல் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிதுரை(23), தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சோ்ந்த முருகேஷ் மகன் பிரபாகரன்(21) ஆகியோரை கைது செய்தனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT