முகப்பு
திருநெல்வேலி

மது விற்றதாக இருவா் கைது

Updated On : 15 மார்ச், 2026 at 8:44 PM
கைது
பகிர்:

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம், சேவியா் காலனி பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த மனோகரன் (46) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல பாளையங்கோட்டை, மணிக்கூண்டு பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையைச் சோ்ந்த பேச்சிமுத்து (31) என்பவரை கைது செய்து, ரூ.140 மற்றும் 28 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →