களக்காடு: களக்காடு ஸ்ரீகோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் கோயிலில் கணுத்திருநாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு மறுதினம் கோயிலில் கணுத்திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு திருநாளையொட்டி, வெள்ளிக்கிழமை காலை சுவாமி சத்தியவாகீஸ்வரா் கோமதி அம்பாள், சந்திரசேகரா் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை வழிபட்டனா்.