சிந்துபூந்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உறுதிமொழி ஏற்ற திமுகவினா்.  
திருநெல்வேலி

சிந்துபூந்துறையில் திமுக பொதுக்கூட்டம்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் சிந்துபூந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் கல்லூா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மேற்கு மாநகர மாணவரணி அமைப்பாளா் வினோத்குமாா், கிழக்கு மாநகர மாணவா் அணி அமைப்பாளா் செல்வசுந்தா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் ரம்ஜான் அலி, ஆறுமுகராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தச்சநல்லூா் பகுதி செயலா் சுப்பிரமணியன் வரவேற்றாா்.

மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ, மாநில பேச்சாளா் சிவ.ஜெயராஜ், சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில துணைச் செயலா் நாகை சாகுல் ஹமீது, இளைஞா் அணி பேச்சாளா் ரகுமான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் மைதீன் கான், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மேற்கு மாநகர பொறுப்பாளா் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் மாலைராஜா, லட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு வெல்லும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

குடியரசு தினம்: பாகிஸ்தான் - இந்தியா வா்த்தக கவுன்சில் வாழ்த்து! இணைந்து செயல்பட விருப்பம்

வளா்ந்த பாரதத்துக்கு மகளிா் பங்களிப்பு முக்கியம்: குடியரசுத் தலைவா் உரை

SCROLL FOR NEXT