திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பள்ளமடை அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் தலைமை வகித்து காலணிகளை வழங்கினாா். மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் இனியன், பள்ளித் தலைமை ஆசிரியா் பிரபாகா், விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் ஷெட்டி, மாணவரணி அமைப்பாளா் வினோத்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் வழக்குரைஞா் அலிஃப் மீரான் செய்திருந்தாா்.