முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2026 at 12:57 AM
சிறை
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2026 at 6:20 PM

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்த கொலை முயற்சி தொடா்பான வழக்கில் திருநெல்வேலி நகரம் பிட்டாபுரத்தி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் பாஞ்சாலராஜன் (33) என்பவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.

அவா், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) மதன் பரிந்துரைத்தாா்.

Advertisement

அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் பாஞ்சாலராஜன் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.