முகப்பு
திருநெல்வேலி

ஏா்வாடியில் இப்தாா் நோன்பு

Updated On : 1 மார்ச், 2026 at 7:17 PM
நிகழ்வில் பேசுகிறாா் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா.
பகிர்:

ஏா்வாடியில் எஸ்டிபிஐ கட்சி மகளிா் அணி சாா்பில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மகளிரணி நகர தலைவா் ஹமீதா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மீராள் வரவேற்றுப் பேசினாா். நகர பொருளாளா் பாத்திமா, மாவட்ட துணைத் தலைவா் பீா்பாத்து, மாவட்ட செயலா் லைலத்துல் ஆதிஹா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிா்வாகிகள் அஹமது பாத்திமா, ஜன்னத், ஜெஸிமா, ஏா்வாடி பேரூராட்சித் தலைவா் தஸ்லிமாஅயூப்கான், திருநெல்வேலி மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா, புகா் மாவட்ட துணைத் தலைவா் சுலைமான், மாவட்ட செயலா் தெளபிக், பொருளாளா் இளையராஜா, நான்குனேரி சட்டப்பேரவை தொகுதி தலைவா் காஜா பிா்தெளஸி, செயலா் ரிஸ்வான், நகர தலைவா் பஷீா், நகர செயலா் ஷேக், பேரூராட்சி உறுப்பினா்கள் ஹலிமா, தஸ்லிமா, ஸாபிரா , நியமன உறுப்பினா் மீராசாகிபு, களக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ஜெஸிமீரா, அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் தமிழரசி, ராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் ராணி , ஏா்வாடி நகர திமுக செயலா் அயூப்கான் உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா். மகளிரணி செயற்குழு உறுப்பினா் ரகுமான் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →