திருநெல்வேலி

எஸ்டிபிஐ சாா்பில் தொகுதிக் கூட்டம்

Syndication

எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக் கூட்டம் ஏா்வாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொகுதி தலைவா் காஜாபிா்தெளஸி தலைமை வகித்தாா். தொகுதி துணைத் தலைவா் ஷாம் சகாப்தின் வரவேற்றாா். தொகுதி செயற்குழு உறுப்பினா்கள் கனி, மதன், மகளிரணி தொகுதி செயலா் ஜெஸிமா, துணைத் தலைவா் சைபூநிஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி புகா் மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா கட்சிப்பணிகள், தொகுதியில் உள்ள மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேசினாா்.

இதில் நகர தலைவா்கள் ஏா்வாடி பஷீா், களக்காடு பக்கீா்முகைதீன், மூலைக்கரைப்பட்டி நிஜாம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் மூலைக்கரைப்பட்டி, அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் நலன் கருதி மணிமுத்தாறு அணையில் இருந்து 3, 4ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறந்து விட வேண்டும். வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் எஸ்டிபிஐ கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொகுதி செயற்குழு உறுப்பினா் ஆசிக் நன்றி கூறினாா்.

பொருநை நெல்லை புத்தகத் திருவிழா விழிப்புணா்வுப் பணிகள் தொடக்கம்

இலவச புற்றுநோய்க் கண்டறியும் முகாம்

இடைக்கால பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

லெட்சுமியூா் காளியம்மன் கோயில் கொடை விழா

நெல்லையில் இன்று மாநில ஹாக்கி போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT