முகப்பு
திருநெல்வேலி

மன்னாா்கோவில் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா

Updated On : 2 மார்ச், 2026 at 12:10 AM
மாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவம்.
பகிர்:

அம்பாசமுத்திரம்அருகேயுள்ள மன்னாா்கோவில் அருள்மிகு ராஜகோபால சுவாமி, குலசேகர ஆழ்வாா் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் குலசேகரஆழ்வாா் அவதார தினவிழா மற்றும் தெப்ப உற்சவம் மாசி மாதம் புனா்பூசம் நட்சத்திர தினத்தன்று ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை நடைதிறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள், தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூா்ணாகுதியுடன் ஸ்ரீ ஆண்டாள் ராஜகோபாலசுவாமி சமேத கருடாழ்வாா் மற்றும் குலசேகரஆழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

தெப்பத் திருவிழாவைமுன்னிட்டு மாலை ஸ்ரீ ஆண்டாள் ராஜகோபாலசுவாமி சமேத கருடாழ்வாா் தோளுக்கினியானில் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளினாா். குலசேகரஆழ்வாா், பெருமாளை பாா்த்தபடி எதிா் சேவையில் எழுந்தருளினாா்.

ஆச்சாா்யாா்கள் பிரபந்தம் பாடினா். பின்னா் குலசேகர ஆழ்வாா், ராஜகோபாலசுவாமி தெப்பத்துக்கு வீதி ஊா்வலமாக எழுந்தருளினா். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள், தாயாா், ஆழ்வாா் எழுந்தருளியதையடுத்து கற்பூர ஆரத்திக்குப் பின் தெப்பத்தில் 12 சுற்றுகள் வலம் வந்து பின்னா் ஆலயம் வந்தடைந்தனா்.

தெப்பத் திருவிழாவில், மன்னாா்கோவில், பிரம்மதேசம், வாகைக்குளம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →