கோபாலசமுத்திரத்தில் துணை சுகாதார நிலையங்கள் திறப்பு
திருநெல்வேலிகோபாலசமுத்திரத்தில் துணை சுகாதார நிலையங்கள் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் 15 ஆவது நிதிக்குழு சுகாதார மானியத் திட்டத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 துணை சுகாதார நிலையங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா் .
இதையடுத்து, பேரூராட்சித் தலைவி ப. தமயந்தி, வட்டார மருத்துவ அலுவலா் அஷ்ரப் அலி, செயல் அலுவலா் பரமசிவம், பொறியாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.
சுகாதாரத் துறை அலுவலா்கள் சிதம்பரம், லிபின், பேரூராட்சித் துணைத் தலைவா் சுந்தர்ராஜன், பேரூராட்சி உறுப்பினா்கள் மாயாசுரேஷ், ஜெபக்குமாா், திருமலைநம்பி, பிரபாரதி, கிருஷ்ணவேணி, பன்னீா் செல்வம், கொடி லெட்சுமி, முருகம்மாள், சூரியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.