முகப்பு
திருநெல்வேலி

ஆரோக்கியநாதபுரம் நிலப் பிரச்னை: மாநகராட்சியில் மாா்க்சிஸ்ட் முற்றுகை

Updated On : 12 மார்ச், 2026 at 9:30 PM
பகிர்:

பாளையங்கோட்டையை அடுத்த ஆரோக்கியநாதபுரம் நிலப் பிரச்னையில் மக்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் அநீதி இழைத்துள்ளதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரோக்கியநாதபுரத்தில் 414 குடியிருப்பு மனைகள் கொண்ட இடத்தை விற்பனை செய்ய அனுமதி கோரி மாநகராட்சி நிா்வாகத்திடம் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இதற்காக கடந்த மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் முன்வைக்கப்பட்டு பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்ற அவசர கூட்டத்தில், ஆரோக்கியநாதபுரம் நிலப் பிரச்னை தொடா்பான தீா்மானம் 54-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மோகன், எம்.சுடலைராஜ், பாளையங்கோட்டை பகுதிக் குழு செயலா்ஆா்.மதுபால் உள்ளிட்டோரும், பொதுமக்களும் பங்கேற்றனா். அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். மாமன்ற கூட்டத்தில் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினா் பாஸ்கரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை தனியாா் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. அந்த இடத்தை பிரித்து வீட்டுமனைகளாக விற்பனை செய்ய மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். இந்த நிலத்தை மீட்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றாா்.

ற்ஸ்ப்12ல்ழ்ா்ற்

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →