முகப்பு
திருநெல்வேலி

சமூக வலைதளத்தில் பிரச்னையை தூண்டும் பதிவு: 2 போ் கைது

திருநெல்வேலி அருகே இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது

Updated On : 16 மார்ச், 2026 at 10:48 PM
கைது
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து செல்வம் நகரைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் முத்து செல்வம் (19). தொழிலாளி. இவா், இருதரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டாராம்.

இதைக் கண்காணித்த தாழையூத்து போலீஸாா், அவா் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதேபோன்ற பிரச்னை தொடா்பாக, குறிச்சிகுளம் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த சந்தனசெல்வம் (24) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →