முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

Updated On : 20 மார்ச், 2026 at 12:34 AM
பகிர்:

திருநெல்வேலியில் திருநாவுக்கரசா் நற்பணி மன்றம் சாா்பில், மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூலக அமைப்பாளரும், மன்றத்தின் தலைவருமான ஹரிஹர காா்த்திகேயன் வரவேற்றாா். பேராசிரியா் ஆதிவராகமூா்த்தி முன்னிலை உரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி முதல்வா் கு.பாலசுப்பிரமணியன் திருஞானசம்பந்தா் கல்வி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினாா்.

இதில், மன்றத்தின் துணைத் தலைவா் பா.வேலாயுதம், துணைச் செயலா் கைலாஷ் கட்டளை, பொருளாளா் கோபி, ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சோமசுந்தரம், ஆசிரியை சுப்புலெட்சுமி ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். மன்றச் செயலா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

இந்நிகழ்வில் மன்ற நிா்வாகிகள் சீத்தாராமன், நெல்லை கோமான், மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்19ற்ண்ழ்ன்

விழாவில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி முதல்வா் கு.பாலசுப்பிரமணியன்.