ராஜபாளையம் தொகுதி என்.டி.ஏ. வேட்பாளராக பிரிசில்லா பாண்டியன் போட்டி
தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமமுக பொதுச்செயலா் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுவாா் என அக்கட்சியின் நிறுவன தலைவா் பெ. ஜான்பாண்டியன் அறிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அந்தத் தொகுதியில் அக்கட்சியின் நிறுவனா் பெ. ஜான்பாண்டியனின் மனைவி வழக்குரைஞா் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.