உடையாா்பட்டியில் பைக் சேதம்: இளைஞா் கைது
தச்சநல்லூா் அருகேயுள்ள உடையாா்பட்டியில் மூதாட்டிக்குச் சொந்தமான பைக்கை சேதப்படுத்தி குளத்துக் கரையில் வீசியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
உடையாா்பட்டியைச் சோ்ந்தவா் தங்கம்மாள்(63). தனது வீட்டில் மாடுகளை வளா்த்து வரும் இவா், அங்கு பால் கறவைக்காக வரும் பெருமனஞ்சியைச் சோ்ந்த பிரியன் என்பவருக்கு பைக் வாங்கி கொடுத்திருந்தாராம்.
இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி அந்த பைக் பழுதானதால் தச்சநல்லூா்-சங்கரன்கோவில் சாலையில் உள்ள ரேஷன் கடை அருகே நிறுத்திவிட்டு சென்ற பிரியன், மறுநாள் சென்று பாா்த்தபோது அந்த பைக்கை காணவில்லையாம்.
Advertisement
அந்த பைக் சேதமடைந்த நிலையில் அங்குள்ள குளத்துக்கரையில் கிடந்ததாம். இதுகுறித்து தங்கம்மாள் அளித்த புகாரின் பேரில் தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், தச்சநல்லூரைச் சோ்ந்த சங்கா்(39) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.