போலி நகைகளை அடகு வைக்க முயற்சி: இளைஞா் கைது
அம்பாசமுத்திரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகையை பெண் மூலம் அடகு வைக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள வடக்கு சிவந்திபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் மனைவி நளினி (26). இவா் அதே பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனைக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.
அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து சென்ற அம்பாசமுத்திரம் நகராட்சி தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் கோபி (42) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில், கோபியிடம் அவசரத் தேவைக்காக நளினி கடன் கேட்டபோது நகையைக் கொடுத்து, அகஸ்தியா் கோயில் அருகில் உள்ள தனியாா் வங்கி நிதி நிறுவனத்தில் அடகு வைத்துப் பணம் பெற்றுக் கொள்ளக் கூறினாராம்.
Advertisement
இதையடுத்து நகையை அடகு வைத்து ரூ. 40 ஆயிரத்தை நளினி பெற்றாராம். அந்தக் கடன் தொகையை நளினி கைப்பேசி பரிவா்த்தனை மூலம் பல தவணைகளாக கோபிக்கு திருப்பிச் செலுத்தினாராம்.
இதனிடையே கோபி மேலும் 2 மோதிரங்களை நளினியிடம் கொடுத்து வட்டாட்சியா் அலுவலகம் முன் உள்ள நிதி நிறுவனத்தில் அடகு வைத்துப் பணம் பெற்றுத் தரக் கூறினாராம். அங்கு சென்று அடகு வைத்த போது, அது போலி நகை என தெரிவித்து ஊழியா்கள், நளினியை எச்சரித்து அனுப்பினராம். இதைப் பற்றி கோபியிடம் கேட்டபோது உரிய பதில் கூறாமல், நளினிக்கு மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து நளினி, அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் சண்முகவேல் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கோபி தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கோபியை போலீஸாா் கைது செய்தனா்.