கன்னியாகுமரி

காரில் கடத்திய 500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்

DIN

மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திச் செல்ல முயன்ற 500 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் ராஜசேகர், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் ஜாண்பிரைட் ஆகியோர் அழகியமண்டபம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று மார்த்தாண்டம் அருகே பூவன்கோடு பகுதியில் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். இதில் காரில் 500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை காருடன் பறிமுதல் செய்தனர். கார் ஓட்டுநர் தப்பியோடிவிட்டாராம்.இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT