கன்னியாகுமரி

குளச்சலில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் சாவு

DIN

குமரி மாவட்டம், குளச்சல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் விசைப்படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
குளச்சலைச் சேர்ந்த நெல்சன் என்பவரின் விசைப்படகில் புதன்கிழமை காலை குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். குளச்சலைச் சேர்ந்த ஜான் மரியவியான்னி(46) என்பவரும் அதில் இருந்தார். படகு புறப்பட்டபோது படகில் இருந்து அவர் கடலில் தவறி விழுந்தார்.  சக மீனவர்கள், ஜான் மரியவியான்னியை காப்பாற்ற முயன்றனராம்.
அதற்குள் அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர், அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் ஜான் மரியவியான்னியை போலீஸார் தேடினர். உயிரிழந்த நிலையில் அவரது உடல் கிடைத்தது.  இது குறித்து குளச்சல் கடலோரக் காவல்படை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT