கன்னியாகுமரி

நாகர்கோவிலில் சித்திரை திருநாள் விழா

DIN

கன்னியாகுமரி மாவட்ட வள்ளலார் பேரவை சார்பில் சித்திரை திருநாள் விழா நாகர்கோவில் வடசேரியில் நடைபெற்றது. 
பேரவை மாவட்டத் தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை வகித்தார். செயலர் ஆர்.ரகுராம் வரவேற்றார். மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் டோக்ரா ஆகியோர் அருட்ஜோதி ஏற்றி வைத்து விழாவை தொடங்கிவைத்தனர். கோபூஜையை பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரிச் செயலர் சி.ராஜன் தொடங்கிவைத்தார். பி.அங்ரி, லதா மாதாஜி, சிதம்பரம் ஆகியோர் அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதினர்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் எஸ்.ஜீவானந்தம்,  குளச்சல் ஜான்போஸ்கோ,  குமரி மாவட்ட  பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் ஜெயாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரவை இணைச் செயலர் பி.மகேஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT